யாழ்ப்பாணம் பாசையூர் கடலில்- வாலிபன் சடலம் மீட்பு

Spread the love

யாழ்ப்பாணம் பாசையூர் கடலில்- வாலிபன் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் பாசையூர் கடலில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பாசையூர் பகுதியைச் சேர்ந்த சில்வெஸ்ரர் சஜித் (27) என்ற இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடற்றொழிலாளர்கள் நான்கு பேர் இன்று (03) பூம்புகார் கடலில் மீன்பிடிக்கச் சென்ற போது, காணாமல் போயுள்ளனர்.

ஒரு இடத்தில் இவரை நிறுத்திவிட்டு, மற்றொரு இடத்தில் தொழில் பார்க்கச்சென்றுள்ளனர்.திரும்பி வந்து பார்த்த போது, அவரைக்

காணவில்லை. பின்னர், மீனவர்கள் சேர்ந்து தேடிய போது, பூம்புகார் கடற்பகுதியில் சடலமாக கரையொதுங்கிய நிலையில், சக மீனவர்களினால் மீட்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய பின்னர், யாழ்ப்பாணம் பொலிஸார் மற்றும் திடீர் மரண

விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் ஆகியோர் சடலத்தை பார்வையிட்டதுடன், சடலத்தை பிரேத பரிசோதனைக்காக

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

      Leave a Reply