யாழில் இளம் பெண் கைது
யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட போலி அடையாள அட்டையுடன் தங்கியிருந்த யுவதியொருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த யுவதி யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட போலி அடையாள அட்டையை காண்பித்து திருநெல்வேலி பகுதியில் வாடகை அறையில் தங்கியிருந்துள்ளார்.
அவரது நடவடிக்கைகளில் வீட்டு உரிமையாளர் சந்தேகம் கொண்டமையால் இது தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இத்தகவலின் பிரகாரம் வீட்டுக்கு சென்ற பொலிஸார் வாடகை அறையில் தங்கியிருந்த யுவதியிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதன்போது யுவதி மருத்துவ பீட மாணவி அல்ல என்பதனையும் அது போலியான அடையாள அட்டை என்பதையும் கண்டறிந்துள்ளனர்.
இதனையடுத்து யுவதி கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்