யானை தாக்கியதில் குடும்பஸ்தர் பலி
மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெள்ளக்கல்மலைப் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர்
உயிரிழந்துள்ளதுடன் காயமடைந்த மற்றுமொருவர் கரடியனாறு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் சனிக்கிழமை (25) இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் இலுப்படிச்சேனை, வேப்பவெட்டுவான் வீதியை சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான 41 வயதுடைய கந்தையா கீர்த்திகுமார் என்பவரே உயிரிழந்துள்ளார். .
யானை தாக்கியதில் குடும்பஸ்தர் பலி
மாடு மேய்க்கச் சென்று மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பும் வேளையில் காட்டு யானை வழிமறித்துத்தாக்கியுள்ளதாகவும்
ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றய நபர் கரடியனாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் கரடியனாறு பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டு தீடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம் நஸீர் சடலத்தை பார்வையிட்டு விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்
மேலும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- அகதிகளாக ஓடிய இஸ்ரேலியர்கள்
- பலஸ்தீனத்திற்கு ஆதரவாக கொழும்பில் போராட்டம்
- யாழில் வெடிமருந்துகள் மீட்பு
- ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
- பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு
- முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்க தடை
- யாழ் சிறைச்சாலை பேருந்து விபத்து
- இஸ்ரேல் படையினர் காயம்
- போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
- விடுதலை வேண்டும் சிறீதரன் எம்பி