மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் பலி

அடம்பன் விபத்தில் இளைஞன் பலி இருவர் படுகாயம்
Spread the love

மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் பலி

தம்புள்ளை – கண்டி பிரதான வீதியின் விஹார சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து நேற்று (05) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கந்தளத்திலிருந்து பிரதான வீதியை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, வீதியோரத்தில் இருந்த நபர் ஒருவரையும், குழந்தை ஒன்றை சுமந்து சென்ற பெண் ஒருவரையும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் பலி

விபத்தில் படுகாயமடைந்த நபரும், குழந்தையை சுமந்து சென்ற பெண்ணும் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குறித்த பெண்ணும் நபரும் உயிரிழந்துள்ளனர்.

குறித்த பெண்ணின் 9 மாத கைக்குழந்தை தம்புள்ளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பண்டாரகம பகுதியில் வசிக்கும் 45 வயதுடைய ஒருவரும், அடையாளம் காணப்படாத 43 வயதுடைய பெண்ணுமே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

சடலங்கள் தம்புள்ளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவரும் காயமடைந்துள்ளதுடன், அவர் பொலிஸ் பாதுகாப்பில் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.