க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் மோசடி-4 பேர் கைது
இம்முறை க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என,
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நேற்று நிறைவடைந்தது. பரீட்சார்த்திக்குப் பதிலாக பரீட்சை எழுதிய குற்றச்சாட்டில்
நேற்றைய தினம் , 21 வயதுடைய இளைஞன் பலாங்கொட பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.