மேல் மாகாணத்தில் வெளியே செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த பயணத் தடை இன்று நள்ளிரவு முதல் நீக்கம்

Spread the love

மேல் மாகாணத்தில் வெளியே செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த பயணத் தடை இன்று நள்ளிரவு முதல் நீக்கம்

மேல் மாகாணத்தில் வெளியே செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த பயணத் தடை இன்று நள்ளிரவு முதல்

மேல் மாகாணத்தில் வெளியே செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த பயணத் தடை இன்று நள்ளிரவு முதல் நீக்கபடுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோகன தெரிவித்தார்.

தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகள் வழமைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை மத்திய கொழும்பு பகுதியில் மேலும் ஐந்து

பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக கொவிட் 19 தொற்றைக் கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர், இராணுவத் தளபதி லெப்டினன் ஜென்ரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி, தற்போது கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 12 பிரதேசங்களுக்கு மேலதிகமாக மருதானை, புறக்கோட்டை,

கோட்டை, கொம்பனித்தெரு, டேம் ஸ்ட்ரீட் ஆகிய பொலிஸ் பிரிவுகள் நாளை காலை ஐந்து மணி முதல் தனிமைப்படுத்தப்படும்.

கம்பஹா மாவட்டத்தில் நீர்கொழும்பு, ஜா-எல, ராகம, கடவத்தை, வத்தளை, பேலியகொட ஆகிய பொலிஸ் பிரிவுகள் தவிர்ந்த ஏனைய

தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் விடுவிக்கப்படவுள்ளன. களனி பொலிஸ் பிரிவு நாளை காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்படும்.

குருணாகல் மாவட்டத்தில் குருணாகல் மாநகர சபைப் பகுதியும், குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவும் களுத்துறை மாவட்டத்தில்

ஹொரனை, இங்கிரிய மற்றும் வேக்கட மேற்கு கிராம சேவகர் பிரிவும், கேகாலை மாவட்டத்தில் ருவன்வெல்ல, மாவனெல்ல ஆகிய

பொலிஸ் பிரிவுகளும் நாளை காலை 5.00 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படும்.

கொழும்பு மாவட்டம்
இதுவரையில் கொழும்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசம் என்ற ரீதியில் பெயரிடப்பட்டிருந்த 12 பொலிஸ்

பிரிவுகளுக்கு மேலதிகமாக பின்வரும் பொலிஸ் பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் என்ற ரீதியில் திங்கட்கிழமை அதாவது 16ஆம் திகதி காலை 5 மணி தொடக்கம் பெயரிடப்படுகின்றன.

மருதானை பொலிஸ் பிரிவு
கோட்டை பொலிஸ் பிரிவு
புறக்கோட்டை
கொம்பனி வீதி பொலிஸ் பிரிவு
டேம் வீதி (Dam Street) பொலிஸ் பிரிவு

கம்பஹா மாவட்டம்

கம்பஹா மாவட்டத்தில் இது வரையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் என்ற ரீதியில் பெயரிடப்பட்டுள்ள பொலிஸ்

பிரிவுகளில் கீழே குறிப்பிடப்படடுள்ள பொலிஸ் பிரவுகள் தவிர எஞ்சிய பிரதேசங்கள் தனிமைப்படுத்தல் நிலையிலிருந்து நாளைய தினம் காலை 5 மணிக்கு விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவு,
ஜாஎல பொலிஸ் பிரிவு,
ராகம பொலிஸ் பிரிவு,
கடவத்தை பொலிஸ் பிரிவு , தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள்
வத்தளை பொலிஸ் பிரிவு,

பேலியகொட பொலிஸ் பிரிவு,

களனி பொலிஸ் பிரிவு – திங்கட்கிழமை (16) காலை 5 மணிதொடக்கம் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக பெயரிடப்பட்டுள்ளது.

  1. இதுவரையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பின்வரும் பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் நிலை நாளை காலை 5 மணி
  2. தொடக்கம் நீக்கப்படுவதாக கொவிட் 19 தொற்றப் பரவலை தடுக்கும் செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

குருநாகல் மாவட்டம்
குருநாகல் மாநகர சபை எல்லைப் பகுதி
குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவு

களுத்துறை மாவட்டம்
ஹொரணை பொலிஸ் பிரிவு
இங்கிரிய பொலிஸ் பிரிவு
வேகட மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு

கேகாலை மாவட்டம்
ரூவன்வெல்லை பொலிஸ் பிரிவு
மாவனெல்லை பொலிஸ் பிரிவு

Leave a Reply