முத்தமிழ் வித்தியாலயத்தின் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு

முத்தமிழ் வித்தியாலயத்தின் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு
Spread the love

முத்தமிழ் வித்தியாலயத்தின் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு

பல வருடங்களுக்கு பின்னர் வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் பின் தங்கிய பாடசாலையான கோயில்புளியங்குளம் முத்தமிழ் வித்தியாலயத்தின் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் குடிநீர் திட்டம் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா, கோவில்குளம் மஹா விஸ்ணு ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ ஜெ.மயூரக்குருக்கள் அவர்களின் நிதிப் பங்களில் வவுனியா ஊடகவியலாளர்களினால் அமைக்கப்பட்ட குடிநீர் திட்டம் தைப்பூச தினமான நேற்று (25) பாடசாலை அதிபரிடம் கையளிக்கப்பட்டது.

குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் குடிநீர் இன்றி பல்வேறு சிரமங்களை எதிர் கொள்வதாக கடந்து 5 வருடங்களுக்கு மேலாக பாடசாலை அதிபர் மற்றும் பாடசாலை சமூகம் பல்வேறு தரப்பினரிடமும் கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.

இது தொடர்பாக குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் மாணவன் ஒருவரின் பெற்றோர் முன் வைத்த கோரிக்கைக்கு அமைவாகவும், அதிபர் அவர்களின் வேண்டுதலுக்கு அமைவாகவும் வவுனியா ஊடகவியலாளர்கள் புலம்பெயர்

தேசத்தில் தற்போது வசிக்கும் வவுனியா, கோவில்குளம் மஹா விஸ்ணு ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ ஜெ.மயூரக்குருக்கள் அவர்களிடம் முன்வைத்த

முத்தமிழ் வித்தியாலயத்தின் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு

கோரிக்கைக்கு அமைவாக அவரால் வழங்கப்பட்ட நிதித் திட்டத்தின் மூலம் மோட்டருடன் கூடிய குழாய் கிணறு நிர்மாணிக்கப்பட்டு, குடிநீர் தாங்கியும் நிறுவி பாடசாலையிடம் கையளிக்கப்பட்டது.

இதன்போது, அதிதிகள் குடிநீர் திட்டத்தை திறந்து வைத்ததுடன், பெயர் பலகையையும் திரை நீக்கம் செய்து வைத்தனர். மாணவர்களுக்கு குடி நீரும் அதிதிகளால் வழங்கப்பட்டதுடன், குறித்த நிகழ்வின் நினைவாக பயன்தரும் மரநடுகையும் இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் மா.அரவிந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வவுனியா உதவிப் பிரதேச செயலாளர் திருமதி சுஜீபன் பிரியதர்சினி, செட்டிகுளம் பிரதேச செயலக இந்து கலாசார உத்தியோகத்தர் சிவ.கஜன்,

ஊடகவியலாளர்களான ந.கபில்நாத், கி.வசந்தரூபன், திருமதி சி.திவியா, வ.பிரதீபன், இ.சங்கர், சமுதாய சிவில் பாதுகாப்பு குழுத் தலைவர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

ஐ எஸ் வெறி செயல் - 44 இராணுவம் சுட்டு கொலை

ஐ எஸ் வெறி செயல் – 44 இராணுவம் சுட்டு கொலை

49 வீரர்களை பலிகொண்ட மாலி தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பேற்புஐ எஸ் வெறி செயல் மாலி நாட்டின் மேனகா பிராந்தியத்தில், இன்தெலிமான் என்ற இடத்தில் ராணுவ சாவடியில் …
பிரேசில் நாட்டில் அமேசான் காடுகள் ஆர்வலர் சுட்டுக்கொலை

பிரேசில் நாட்டில் அமேசான் காடுகள் ஆர்வலர் சுட்டுக்கொலை

பிரேசில் நாட்டில் அமேசான் காடுகள் ஆர்வலர் சுட்டுக்கொலை பிரேசில் நாட்டில் அமேசான் காடுகள் ஆர்வலராக விளங்கியவர், பூர்வகுடியைச் சேர்ந்த பவுலோ பவுலினோ குவாஜாஜாரா. அங்கு காடுகளில் உள்ள …
இட்லி தோசைக்கு பதிலாக 10 நிமிடத்தில் ஈசியான டிபன் sidedish தேவையில்லை| உடனடி டிபன்|No sidedish டிபன்

காலியில் கோர விபத்து 2 பெண்கள் பலி- 7 பேர் படுகாயம்

காலியில் கோர விபத்து 2 பெண்கள் பலி- 7 பேர் படுகாயம்…! காலி – அகுரெஸ்ஸ வீதியின் இமதுவ அகுலுகங்க சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு …
கோட்டா வேண்டாம்  வெள்ளைவான் வேண்டாம் ரணில்

கோட்டா வேண்டாம் வெள்ளைவான் வேண்டாம் ரணில்

கோட்டா வேண்டாம் வெள்ளைவான் வேண்டாம் ரணில் இலங்கை தேர்தலில் அன்னத்துக்கு வாக்களித்தால்,கோட்டா  இல்லை  வெள்ளை வான் இல்லை என யாழில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் பிரதமர் ரணில் …
யாழ் நாகவிகாரை சென்று வழிபட்ட ரணில் குழு- யாழில் பிரச்சாரம் ஆரம்பம்..!

யாழ் நாகவிகாரை சென்று வழிபட்ட ரணில் குழு- யாழில் பிரச்சாரம் ஆரம்பம்..!

யாழ் நாகவிகாரை சென்று வழிபட்ட ரணில் குழு- யாழில் பிரச்சாரம் ஆரம்பம்..! தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் பொருட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர் யாழிற்கு விஜயம் …
வவுனியாவில் மாநாடு நடத்துகிறார் மஹிந்தவின் கைக்கூலி டக்ளஸ்…!

வவுனியாவில் மாநாடு நடத்துகிறார் மஹிந்தவின் கைக்கூலி டக்ளஸ்…!

வவுனியாவில் மாநாடு நடத்துகிறார் மஹிந்தவின் கைக்கூலி டக்ளஸ்…! வவுனியா கலைமகள் மைதானத்தில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தேர்தல் பிரச்சார மாநாடு இடம்பெற்று வருகின்றது. மாநாடு இன்று (03) …