முச்சக்கரவண்டி விபத்தில் ஒருவர் பலி

முச்சக்கரவண்டி விபத்தில் ஒருவர் பலி
Spread the love

முச்சக்கரவண்டி விபத்தில் ஒருவர் பலி

கல்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்பிட்டி – பலாவியா வீதியில் உள்ள குரிங்கம்பிட்டிய கத்தோலிக்க தேவாலயத்திற்கு முன்பாக வாகன விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கல்பிட்டியிலிருந்து பலாவியா நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி ஒன்று வீதியில் திரும்பும் போது அந்த வீதிக்கு முன்னால் வந்த மற்றுமொரு முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தின் போது 2 முச்சக்கர வண்டிகளில் சாரதிகள் உட்பட 8 பேர் பயணித்துள்ளனர்.

விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்தவர்கள் கல்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

65 வயதுடைய கல்பிட்டி – மண்டலக்குடாவ பகுதியைச் சேர்ந்த ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்