மீகொட பொருளாதார மையத்தில் துப்பாக்கிச் சூடு
மீகொட பொருளாதார மத்திய நிலையத்தில் உள்ள கடை ஒன்றில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
மீகொட பொருளாதார மத்திய நிலையத்தில் உள்ள கடை ஒன்றில் நேற்று (11) இரவு கொள்ளையடிக்க வந்தவர்களே இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும், கொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.