மின்தடைக்கு அமைச்சே காரணமெனின் ‘பதவி விலகத் தயார்’- மின்சக்தி அமைச்சர்
நாடுபூராகவும் மின்தடை ஏற்பட்டமைக்கு, மின்சக்தி அமைச்சு பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டுமென , மின்தடை தொடர்பில்
ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையில்
குறிப்பிடப்படுமாயின், தான் தனது அமைச்சுப் பதவியை துறக்க
தயாராகவுள்ளதாக மின்சக்தி அமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார்.
மாத்தறை- அக்குரஸ்ஸ பிரதேசத்தில் நேற்று (22) நடைபெற்ற மக்கள்
சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இந்த மாதம் 17ஆம் நாடுபூராகவும் 8 மணித்தியால திடீர் மின்தடை ஏற்பட்டது.
இந்த மின்தடை குறித்து ஆராய்வதற்காக, அமைச்சர் டலஸ் அலகப்பெருமவின்
ஆலோசனைக்கமைய, குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன், அந்த குழுவின்
அறிக்கை நாளைய தினம் தன்னிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.