மாணவர்கள் மீது வன்முறை; அதிபருடன் அறுவர் கைது
கண்டி பொக்கவெல பகுதியில் மாணவர்களை கொடூரமாக தாக்கிய குற்றச்சாட்டில் அதிபர் உட்பட ஆறு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தனியார் பாடசாலையில் கல்வி கற்கும் 15 இலிருந்து 17 வயதுக்குட்பட்ட மாணவ மாணவிகள் பாடசாலை விடுதிக்குள் வைத்து ஆசிரியர்கள் மற்றும் அதிபரால் ஒழுக்கக் கேடு காரணமாக இரக்கமின்றி தாக்கப்பட்டதையடுத்து கண்டிப் பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் விசாரணை ஒன்றை துவக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை இரவு ஐந்து மாணவர்கள் இரகசியமாக பாடசாலையின் பெண்கள் விடுதிக்குள் நுழைந்ததனால் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப் பட்டதாக விசாரணைகளில் தெரிய வருகிறது. ஐந்து
மாணவிகளை சந்திக்க அவர்களின் சம்மதத்துடன் குறித்த மாணவர்கள் விடுதிக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது.
மாணவர்கள் மீது வன்முறை; அதிபருடன் அறுவர் கைது
சம்பந்தப்பட்ட மாணவர்கள் கடுமையான தாக்குதலுக்கும் கொடுமைக்கும் ஆளாகியிருப்பதுடன் அவர்களின் தலைமுடியும் வெட்டப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
கைது செய்யப்பட்டவர்களுள் விடுதி காப்பாளர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் கண்டி நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப் பட்ட பின்னர் மார்ச் மாதம் 20 ஆம் திகதி வரையில் பொலிஸ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் மருத்துவ பரிசோதனைக்காக கண்டி சட்ட வைத்திய அதிகாரியிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்