பொலனறுவையில் கவிழ்ந்த பேரூந்து தப்பிய இசைக்குழு
பொலனறுவை ஓங்கம பகுதியில் இசை குழு பயணித்த பேரூந்து ஒன்று கவிழ்ந்ததில் அதில் பயணித்த ,இசை குழுவை சேர்ந்தவர்கள் காயமடைந்துள்ளனர் .
பொலனறுவை பகுதியில் இசை நிகழ்ச்சியை நடத்தி விட்டு, வீடு திரும்பிய அதே இசைக்குழுவை சேர்ந்த சாரதி ஒருவரே பேரூந்தை செலுத்தி வந்துள்ளார் .
அதன் பொழுதே சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பேரூந்து விபத்தில் சிக்கி கவிழ்ந்துள்ளது .
பேரூந்து தலைகீழாக கவிழ்ந்த பொழுதும் அதில் பயணித்த இசை குழு உறுப்பினர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பித்துள்ளனர் .
மக்களை மகிழ்விக்க இசை நிகழ்ச்சி நடத்திய இசை குழு, பேரூந்து விபத்தில் சிக்கிய சம்பவம் ,அந்த இசை குழு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .