மாட்டு திருடர்களை மடக்கிய காவல்துறை

Spread the love

மாட்டு திருடர்களை மடக்கிய காவல்துறை

திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சர்தாபுர பிரதேசத்தில் சிறிய

லொறியொன்றில் நேற்று (31) அதிகாலை 4.30 மணியளவில் இறைச்சிக்காக கடத்திச் செல்லப்பட்ட 16 மாடுகளை தாம் மீட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

அத்தோடு, மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி பரிமுதல் செய்யப்பட்டு, லொறியின் ஓட்டுநரையும் உதவியாளரையும் கைதுசெய்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட 16 மாடுகளில் 10 ஆண் மாடுகளும் 6 பசுக்களும் அடங்குவதாகவும் கைது

செய்யப்பட்டவர்களையும் மீட்கப்பட்ட மாடுகளையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் உப்புவெளி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

    Leave a Reply