மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் சிக்கல்

Spread the love

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் உள்ள சிக்கல் நிலைமைக்குத் தீர்வு காண்பதற்கு, குறைந்தது 6 மாத காலம் தேவையென எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்த கல்வி அமைச்சரான ஜி.எல். பீரிஸ், குழப்பகரமான சூழ்நிலையில் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது. சிறந்த தீர்வு கண்டதன் பின்னரே நடத்தப்படும் என்றார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று (5) நடை​பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மாகாண சபை தேர்தலில் எல்லை நிர்ணய பிரச்சினை பிரதானமாக கருதப்படுகிறது. இப்பிரச்சினைக்கு தீர்வு காண எல்லை நிர்ணய குழுவினை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதென தெரிவித்த அவர்,மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

“தேர்தலை பிற்போட வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது. நல்லாட்சி அரசாங்கம் குறுகிய அரசியல் தேவைக்காக மாகாண சபை தேர்தலில் குழப்பகரமான சூழலை ஏற்படுத்தியது.

2017 ஆம் ஆண்டு மாகாண சபை தேர்தல் தொடர்பிலான தேர்தல் முறைமை இரத்து செய்யப்பட்டன. இதற்கு பதிலாக பிறிதொரு தேர்தல் முறைமை அப்போது அறிமுகப்படுத்தப்படவில்லை” என்றார்.

உத்தேச புதிய அரசியலமைப்பு தொடர்பிலான வரைவு எதிர்வரும் ஜூன் மாதம் முழுமையாக கிடைக்கப் பெறும் என தெரிவித்த அவர், நாட்டுக்கு பொருந்தும் வகையிலான அரசியலமைப்பினை உருவாக்குவோமென நாட்டு மக்களுக்கு வாக்குறுதி வழங்கினோம். தற்போது நடைமுறையில் உள்ள அரசியலமைப்பின் பல ஏற்பாடுகள் தற்போதைய சூழ்நிலைக்கு பொருத்தமாற்றதாக உள்ளது என்றார்.

தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் முறைமை நிலையான அரசாங்கத்தை தோற்றுவிப்பதற்கு சாதகமாக அமையவில்லை. 2020ஆம் ஆண்டு இடம் பெற்று முடிந்த

பொதுத்தேர்தலிலும் இத்தன்மை காணப்படுகிறது. விருப்பு வாக்குமுறைமை அரசியல் கட்சிகளுக்கிடையில் மாத்திரமல்ல, அரசியல் கட்சிக்குள்ளும் முரண்பாட்டை ஏற்படுத்தியுள்ளது.

நடைமுறையில் உள்ள தேர்தல் முறைமையில் காணப்படும் குறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து, குறைப்பாடுகளுக்குத் தீர்வு காண பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் அனைத்து

அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கி 15 பேரை கொண்ட குழுவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.

Leave a Reply