மறந்து விட முனையாதே …!
கால் பந்தாய் அடித்தென்னை
களைத்து போயிருப்பாய்
கோபம் தனிய முன்
கொளுத்தி விடு என்னை ….
வேண்டாம் என்றென்னை
வேலி போட்டிருந்தாய்
ஆயினும் இன்றென்ன
அலை காற்றாய் நுழைந்து விட்டேன்
சிந்தையில நீ இருந்து
சிலுக்கா ஆடையில
முந்தைய நினவுவுகள்
முளை அறுமா கூறு …?
வெட்டி வைத்த ஆற்றுக்குள்
விரைந்து வரும் நீராய்
புகுந்து விட்டாய் நெஞ்சுக்குள்
பூவை மறப்பேனா …?
மறந்து விட என்னை
மறுபடியும் முனையாதே
தொடும் வரை உன்னை
தொடர்வேன் மறவாதே …!
வன்னி மைந்தன்
ஆக்கம் -03-10-2020