மருதானை பகுதிகளில் ட்ரோன் கமராக்கள்

Spread the love

மருதானை பகுதிகளில் ட்ரோன் கமராக்கள்

நாட்டில் நேற்றைய தினம் தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை மீறிய ஆயிரத்து 82 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்களில் பலர் கண்டி மாத்தளை மற்றும் குளியாப்பிட்டி பிரதேசங்களிலேயே கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜத் ரோஹண தெரிவித்தார்.

கொழும்பு – வாழைத்தோட்டம் மற்றும் மருதானை பகுதிகளில் ட்ரோன் கமராக்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 12

பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இந்த ட்ரோன் கமராக்களின் மூலம் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கைகளில், தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 143 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் மேலும் கூறினார்

Leave a Reply