மருதங்கேணி – செம்பியன்பற்று குளத்தின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

Spread the love

மருதங்கேணி – செம்பியன்பற்று குளத்தின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

நீர்ப்பாசன செழுமை தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மருதங்கேணி – செம்பியன்பற்று நாவலடி குளத்தின் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நீர்ப்பாசன செழுமை தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கிராமிய குளங்கள் மற்றும் அணைக்கட்டுகளை அபிவிருத்தி செய்யும் பணிகளின் ஓர் அங்கமாக மருதங்கேணி பிரதேச

செயலகத்துக்குட்பட்ட, J/427 செம்பியன்பற்று தெற்கு கிராமத்தின் நாவலடி குளத்தை அபிவிருத்தி செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன் ஆரம்ப நிகழ்வில் பிரதமவிருந்தினராக கலந்துகொண்ட, பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன்;

அடிக்கல் நாட்டி பணிகளை ஆரம்பித்ததுடன், திட்டத்தின் பெயர்ப்பலகையையும் திரைநீக்கம் செய்தார்.

மேலும், அப்பகுதி விவசாயிகளின் பிரச்சனைகளை கேட்டறிந்ததோடு உடனடி நடவடிக்கைகளை

எடுத்து அவற்றை தீர்த்துவைக்குமாறும் உரிய அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தல்களை வழங்கினார்.

இந் நிகழ்ச்சித்திட்டமானது நீர்ப்பாசன அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் கிராமிய வயல் நிலங்கள் மற்றும் அண்டியுள்ள குளங்கள், நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்ப்பாசன அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்படுகின்றது.

அதன்படி, நாவலடி குளத்தின் அபிவிருத்திப்பணிகளுக்காக 3,866,000 ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


யாழ் மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கத்தால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள இச்செயற்பாடுகள் 4 மாதங்களில் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இக்குளத்தை அபிவிருத்தி செய்து குளத்தின் நீர் கொள்ளளவை அதிகரிக்கச் செய்வதனூடாக, நெல் மற்றும் வெங்காயப் பயிர்ச்செய்கைகளை பெருமளவில் மேற்கொள்ளும் செம்பியன்பற்று கிராம மக்கள் நன்மையடையவுள்ளனர்.

இக்குளத்தை அபிவிருத்தி செய்துதருமாறு குறித்த கிராம மக்கள் முன்வைத்த கோரிக்கையை கருத்தில் கொண்ட அங்கஜன் இராமநாதனுக்கு நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் தமது நன்றியை நேரில் தெரிவித்தனர்.

    Leave a Reply