மரியுபோல் நகரை கைப்பற்றியது ரஷியா

Spread the love

மரியுபோல் நகரை கைப்பற்றியது ரஷியா

உக்ரைன் மீது ரஷியா 50-வது நாளாக போர் தொடுத்துவருகிறது. ரஷிய தாக்குதலுக்கு

உக்ரைன் ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. ரஷியா கட்டுப்பாட்டில் இருந்த சில பகுதிகளை உக்ரைன் மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது.

உக்ரைனில் ரஷிய படைகளின் தாக்குதலில் மரியுபோல் நகரம் பெறும் சேதத்தை சந்தித்துள்ளது. அங்குள்ள 95 சதவீத கட்டிடங்கள் அழிக்கப்பட்டுள்ளன. மரியுபோல்

நகரை கடந்த 6 வாரங்களாக முற்றுகையிட்டு கடுமையான தாக்குதலை நடத்திய ரஷிய படைகள் அந்நகருக்குள் பெருமளவில் முன்னேறியுள்ளது.

இதனால் மரியுபோல் நகரை விரைவில் ரஷியா கைப்பற்றும் நிலை உள்ளது. உக்ரைன் படையினர் எதிர்த்து போராட முடியாத நிலையில் உள்ளனர்.


மரியுபோலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உக்ரைன் வீரர்கள் சரண் அடைந்துள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது.

    Leave a Reply