மன்னாரை சேர்ந்த 7 பேர் தனுஷ்கோடியில் அகதிகளாக தஞ்சம்
மன்னாரைச் சேர்ந்த 2 குடும்பம் 7 பேர் படகு மூலம் நேற்று (01) தனுஷ்கோடி அடுத்துள்ள மூன்றாம் மணல் திட்டில் சென்று இறங்கியுள்ளனர்.
மன்னார் – சாந்திபுரம் பகுதியைச் சேர்ந்த 2 குடும்பங்கள் இவ்வாறு தஞ்சமடைந்துள்ளனர்.
படகு கட்டணமாக இரண்டு குடும்பங்களும் சேர்ந்து ஒரு இலட்சம் ரூபாய் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மன்னாரை சேர்ந்த 7 பேர் தனுஷ்கோடியில் அகதிகளாக தஞ்சம்
தகவல் அறிந்த ராமேஸ்வரம் மரைன் பொலிஸார் அவரை மீட்டு முதற்கட்ட விசாரணைக்கு பின்னர் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைத்தனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தாங்கள் இரண்டு குடும்பங்களும் படகு மூலம் தனுஷ்கோடிக்கு வருகை தந்ததாக தெரிவித்துள்ளனர்.
பொருளாதார நெருக்கடி காரணமாக இன்று வரை 295 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடி வந்து மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- முள்ளிவாய்க்காலில் நடந்த பெரும் அதிர்ச்சி
- நந்திக்கடலில் ரவிகரன் அஞ்சலி
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு
- அரச துறையில் ஊழல் மோசடி
- மழையுடனான வானிலை வௌ்ள அபாயம்
- மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் சவால்கள்
- பொது வேட்பாளரை ஆராய்கிறோம் டெலோ
- ரஷ்ய போரில் பங்கெடுத்திருக்கும் இலங்கையர்கள்
- யாழில் கொலை செய்யப்பட்ட பெண்
- ஆயிரம்போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது