மனித நேயத்தை உணர்த்திய ரிஸ்வான்- வே.இராதாகிருஸ்ணன்

Spread the love

மனித நேயத்தை உணர்த்திய ரிஸ்வான்- வே.இராதாகிருஸ்ணன்

தலவாக்கலை பகுதியில் தனது உயிரையும் துச்சமென மதித்து ஒரு பெண் உயிரைக் காப்பாற்றிய அந்த மனிதநேயத்திற்கு ‘

தலைவணங்குகின்றோம்.இன மத மொழிக்கு அப்பாற்பட்டு நாம் அனைவரும் மனிதர்களே என்பதை இந்த உலகிற்கு உனர்த்தி

சென்றுள்ளான் ஆப்தீன் ரிஸ்வான் அவருடைய குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் அவருடைய ஆத்மா

சாந்தியடைவதற்கும் இறைவனை பிரார்த்திக்கின்றேன் என்று கூறுகின்றார் முன்னால் அமைச்சரும் மலையக மக்கள்

முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணன் அவர்கள்.

தலவாக்கலையின் பெண்ணின் உயிரை காப்பாற்றிவிட்டு தனது உயிரை மாய்த்துக் கொண்ட ரிஸ்வான் என்ற இளைஞனின் உன்னத

செயற் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்

இலங்கையில் குறிப்பாக மலையகத்தில் மனிதத்துவம் சாகவில்லை. ஒருவருக்கு இன்னல் என்றவுடன் துடிதுடிதுடிக்கும்

உள்ளங்களே பொருமாலும் காணப்டுகின்றன. அரசியல் காரணங்களிளால் தான் இன்று இனங்கள் பிரிக்கப்பட்டு

வருகின்றன. ஆனால் மக்களளே அவற்றுக்கெல்லாம ஒருபடி மேல் சிந்தித்து செயற்படுகின்றனர். அந்த வகையில் ரிஸ்வானின்

செயற்பாடு மதிக்கதக்கது. எதிர்வரும் காலங்களில் இன மத பேதம் இன்றி அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை ரிஸ்வானின் செயற்பாது உணர்த்தி நிற்கின்றது.

ரிஸ்வானுக்கு ஏதும் செய்ய வேண்டும் என்றாலோ அவரின் ஆத்தமா சாந்தியடைய வேண்டும் என்றும் நினைப்பவர்கள் ரிஸ்வானின்

கொள்கைளை கடைபிடியுங்கள் அதுவே இவருக்கு நாம் செய்யும் உன்னத மறியhதையாக இருக்கும். என்று மேலும் அவர் கருத்து தெரிவித்தார்.

      Leave a Reply