நாட்டில் பல பிரதேசங்களில் பெய்துவரும் கன மழையின் காரணமாக 5 மாவட்டஙகளில் மண் சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காலி, களுத்துறை, கேகாலை , நுவரரெலியா மற்றும் இரத்னபுரி ஆகிய மாவட்டங்களுக்கு
மணசரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக தேசிய கட்டிட ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த அனர்த்த எச்சரிக்கை நாளை மாலை 5.00 மணிவரை ஏற்புடையது என கட்டிட ஆய்வு
நிறுவனம் தெரிவித்துள்ளது.