மண்சரிவு தெற்கு அதிவேக வீதி பாதிப்பு
மண்சரிவு காரணமாக தெற்கு அதிவேக வீதியில் பின்னதுவ மற்றும் இமதுவ பகுதிக்கு இடையிலான போக்குவரத்து தொடர்ந்தும் தடைப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகள் இணைந்து தற்போது வீதியை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் எல்.வி.எஸ்.வீரகோன் தெரிவித்தார்.
நேற்று (11) பிற்பகல் பெய்த மழையுடன் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக பின்னதுவ மற்றும் இமதுவ இடையிலான 102 கிலோ மீற்றர் பகுதி வாகன போக்குவரத்து தடைப்பட்டது.
எவ்வாறாயினும், நான்கு பாதைகளில் இரண்டு பாதைகள் புனரமைக்கப்பட்டு இன்று (12) பிற்பகல் போக்குவரத்துக்காக திறக்கப்படும் என
எதிர்பார்க்கப்படுவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எல்.வி.எஸ்.வீரகோன் தெரிவித்தார்.
மண்சரிவு தெற்கு அதிவேக வீதி பாதிப்பு
இதேவேளை, மண்சரிவு ஏற்பட்ட இடத்தை இன்று ஆய்வு செய்து தேவையான குறுகிய கால மற்றும் நீண்டகால தீர்வுகள் வழங்கப்படும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ஆசிறி கருணாவர்தன தெரிவித்தார்.
இதேவேளை மண்சரிவு ஏற்பட்ட போது குறித்த இடத்தை பார்வையிடச் சென்ற பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் உட்பட ஏழு பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
6 பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் இவ்வாறு காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
இதேவேளை, ஓபநாயக்க மாதொல பகுதியில் மண்சரிவு காரணமாக தடைப்பட்டிருந்த பதுளை – கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
- ரஷ்ய போரில் பங்கெடுத்திருக்கும் இலங்கையர்கள்
- யாழில் கொலை செய்யப்பட்ட பெண்
- ஆயிரம்போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது
- பாடசாலை மாணவர்களின் வருகை அதிகரிப்பு
- இலங்கை போர்க்குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்புவதற்கு தொழிற்கட்சி உறுதி
- கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வு ஜூலையில்
- பட்டப்பகலில் கடத்தப்பட்ட மாணவி
- சஜித்அநுர விவாதத்திற்காக பொது விடுமுறை
- விஜயதாசவுக்கு எதிரான தடை உத்தரவு
- இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைக்க அரசுஅவதானம்