மக்கள் கொந்தளிப்பை தணிக்க எரிபொருள் விலையை குறைக்கும் ரணில்

Spread the love

மக்கள் கொந்தளிப்பை தணிக்க எரிபொருள் விலையை குறைக்கும் ரணில்

இலங்கை ,கொழும்பு ; இலங்கையில் எட்டாவது புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எரிபொருள் விலைகளை குறைக்க திட்டமிட்டுள்ளார் .

இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் ஐம்பது முதல் நூறு ரூபா வரை குறைக்க படவுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளனர் .

மக்கள் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நாடத்தினால் அது தனது அரசியல் வாழ்வை முடக்கிவிட்டும் என்பதால் ரணில் விக்கிரமசிங்க இந்த அதிரடி விலை குறைப்பு நடவடிக்கைக்கு திட்டமிட்டுள்ளார் .

மேலும் சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளை சமாளிக்க வேண்டிய நிலையில் உள்ளதாலும் இந்த விடயம் கண்துடைப்பு நாடகமாக அரங்கேற்ற படுகிறது .

இந்த எரிபொருள் விலை குறைப்பின் பின்னர் இலங்கையில் ஆளும் ரணில் விக்கிரமசிங்க ஆட்சி நிலைத்து நிற்குமா .மக்கள் கோபம் தணியுமா என்பதே கேள்வியாக உள்ளது .

    Leave a Reply