மகளை கொன்ற தாய்

Spread the love

மகளை கொன்ற தாய்

நிகவரெடிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலாகொலஹேன கந்தேகெதர வீதியின் கந்தேகெதர பகுதியில் இருந்து

தலாகொலஹேன நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளானதில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (18) மாலை 3.50 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனரான பெண் மற்றும் பின்னால் அமர்ந்து சென்ற அவரது இரண்டு குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் 15 வயதுடைய சிறுமி வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

மற்றைய இருவரும் நிகவரெடிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காயமடைந்தவர்களில் 2 வயது குழந்தை ஒன்றும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

மகளை கொன்ற தாய்

Leave a Reply