மகளை கொடுமை படுத்திய தந்தை , அத்தை கைது
நுரைச்சோலை பகுதியில் உள்ள வீடொன்றில் 13 வயதுடைய சிறுமி ஒருவர் கொடுமைகளுக்கு
உட்படுவதாக பொலிஸாரிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த சிறுமியை பொலிஸார் காப்பற்றியுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் சிறுமியின் தந்தை மற்றும் தந்தையின் சகோதரி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தியதை அடுத்து அவர்களை எதிர்வரும் 2 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.