போராட்டத்தில் கைகோர்த்த தமிழர்கள்

Spread the love

போராட்டத்தில் கைகோர்த்த தமிழர்கள்

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்துகம தொகுதி அமைப்பாளர் ஶ்ரீபால் வன்னிஆராய்ச்சியினால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதிகரித்துள்ள வாழ்க்கை செலவுக்கு எதிராகவும், அது குறித்து அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க தவறியுள்ளமைக்கும் எதிர்ப்பு தெரிவித்து இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கை செலவு அதிகரிப்பினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள பெருந்தோட்ட தமிழ் மக்களும் இந்த போராட்டத்தில் கலந்துக்கொண்டு எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

தீபந்தங்களை ஏந்தியவாறு மத்துகம நகர் மத்தியில் இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் பங்காளி கட்சியான ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி, அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு
எதிராக நடத்திய முதலாவது போராட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply