பேரூந்து விபத்தில் 15 பேர் மரணம் 47 பேர் காயம்
மெக்சிகோவில் விடுமுறைக் கால சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற ,
பேருந்து நெடுஞ்சாலையில் கவிழ்ந்ததில், 15 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 47 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் .
.
இந்த விபத்தில் பலியாகி ,காயமடைந்தவர்கள் யாவரும் ,
அந்த மாநிலத்தில் உள்ள ,அதே நகரமான லியோனைச் சேர்ந்தவர்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர் .
பேரூந்து விபத்தில் 15 பேர் மரணம் 47 பேர் காயம்
பேருந்து வாடகைக்கு அமர்த்தி நண்பர்கள், உறவினர்கள் ,அயலவர்கள் ஒன்றாக கூடி கடற்கரை,
விடுமுறைக்கு சென்று வீடு திரும்பிய போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது .
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் நால்வர் சிறுவர்கள் என தெரிவிக்க பட்டுள்ளது .இந்த விபத்துக்கான காரணம் தெரிவிக்க படவில்லை .
தனியார் பேரூந்து சேவையில் ஈடுபடுபவர்கள் ,தமது பேருந்துகளை முறையாக பராமரிப்பு ,
இல்லாமையாலும் விபத்துக்கள் இடம்பெற்று உள்ளன .
எனினும் இந்த விபத்துக்கான காரணம் தெரியவரவில்லை .
விசாரணைகள் தொடர்ந்து இடம் பெற்ற வண்ணம் உள்ளன .