பேருந்து விபத்தில் பலர் காயம்
வெலிகந்த, சிங்கபுர பிரதேசத்தில் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
வெலிகந்த சிங்கபுர வீதியில் 8 ஆவது கிலோ மீற்றர் தூண் பகுதியில் பேருந்து சாரதிக்கு பேருந்தின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து இடம்பெற்ற போது பேருந்தில் சுமார் 75 பேர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பேருந்து விபத்தில் பலர் காயம்
தனியார் நிறுவன ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்தே விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் வெலிகந்த பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
- ஈரான் ஜனாதிபதி சடலம் மீட்பு
- இராணுவவாகனம் மோதி யுவதி பலி
- இலங்கை வருகிறார் எலோன் மஸ்க்
- ஈரான் ஜனாதிபதிஉள்ளிட்ட 12 மரணம்
- சிக்கிய திருட்டு கும்பல்
- நாட்டில் உற்பத்தி நடவடிக்கைகளில் பின்னடைவு
- ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் யார்
- ஈரான் ஜனாதிபதி உலங்குவானூர்தி வீழ்ந்து நொறுங்கியது
- ஓடும் இஸ்ரேல் படைகள்
- இஸ்ரேல் இராணுவ தளபதிகள் பலி