புளியம்பக்கணை நாகதம்பிரான் பங்குனி உத்திர பொங்கல்
புளியம்பக்கணை நாகதம்பிரான் பங்குனி உத்திர பொங்கல் நேற்று (24) இடம்பெற்றது.
வரலாற்று சிறப்பு மிக்க கிளிநொச்சி – கரைச்சி, புளியம்பக்கணை நாகதம்பிரான் ஆலய பங்குனி உத்திர பொங்கல் நிகழ்வு இடம்பெற்றது.
குறித்த பொங்கல் நிகழ்வுக்காக கடந்த 17 ஆம் திகதி பண்டம் எடுத்து வர புத்தூர் பண்டமாவடி சென்று அங்கு மக்களிடம் சேகரிக்கப்பட்ட பொருட்களை மாட்டு வண்டில்களில் நேற்று கொண்டு வரப்பட்டது.
தொடர்ந்து பொங்கல் நிகழ்வுகள் நடைபெற்றன. நேற்று நடைபெற்ற நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.