பிள்ளையான் சிறைச்சாலை அதிகாரிகளுடன் சந்திப்பு
மட்டக்களப்பு ; மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கும் பிள்ளையான மட்டக்களப்பு சிறைச்சாலை அதிகாரிகளுக்குமிடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் நாட்டில் ஏற்பட்டுள்ள
பொருளாதார நெருக்கடி எரிபொருள் பிரச்சினையின் காரணமாக சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் கடமைக்கு தடங்கல்கள் ஏற்படாதவகையில் எரிபொருளினை விநியோகிப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பிலும்
தீர்க்கமான முடிவுகள் இதன்போது எட்டப்பட்டுள்ளன.