பிரித்தானியாவில் அதிர்ந்த அமெரிக்க தூதரகம் – சுதந்திர வேட்டை – photo
இன்று பிரித்தானியாவிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் முன் இலங்கை பாதுகாப்புப் படையினரின் மனித உரிமை மீறல் குறித்து சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காக ஒரு போராட்டத்தை
தமிழர்களுக்கான சுதந்திர வேட்டைக்காரர்கள் ஏற்பாடு செய்திருந்தனர் . , (21 :09 :2021 )செவ்வாய் கிழமை12 மணியளவில் , அமைதியான முறையில் ஏற்பாடு செய்திருந்த போராட்டத்தில் .தமிழர்களுக்கான
சுதந்திர வேட்டைக்காரர்கள் “இலங்கை இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா என்ற பெயரிடப்பட்ட இலங்கைப் போர்க்குற்றவாளி மீது பயணத் தடையை விதிக்குமாறு இங்கிலாந்து
அரசாங்கத்தை அமெரிக்க அரசாங்கம் அழுத்தம் கொடுக்குமாறும் ,ஐ .நா சபையே கால தாமதமில்லாமல் தமிழர்களுக்கு நீதியை துரித படுத்தி வழங்குமாறும் ,ஸ்ரீலங்காவுக்கு இனியும்
காலம் கொடுக்காது தமிழ். மக்களுக்கு சரியான நீதி கிடைக்க செய்யுமாறும் பல கோரிக்கை களை முன்வைத்து கோவிட் விதிகளை பின் பற்றி செய்வனவே செய்திருந்தனர்