பாரத் லங்கா வீட்டுத்திட்டம் இன்று ஆரம்பம்

பாரத் லங்கா வீட்டுத்திட்டம் இன்று ஆரம்பம்
Spread the love

பாரத் லங்கா வீட்டுத்திட்டம் இன்று ஆரம்பம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலில் இந்திய அரசின் நிதி உதவியுடன் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஒருங்கிணைப்பின் கீழ் மலையகத்துக்கான 10 ஆயிரம் பாரத் – லங்கா எனும் வீட்டுத் திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்படுகின்றது.

முதற்கட்டமாக ஆயிரத்து 300 வீடுகளுக்கு ஒரே தடவையில் நிர்மாணப் பணிகளுக்கான அங்குரார்ப்பணம் இடம்பெறவுள்ளது.

இதன் பணிகளை எதிர்வரும் ஒகஸ்ட் மாதத்துக்குள் நிறைவு செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

நுவரெலியா, கண்டி, பதுளை, மாத்தளை, கேகாலை, குருணாகல், இரத்தினபுரி, காலி, களுத்துறை மற்றும் மொனராகலை ஆகிய 10 மாவட்டங்களை உள்ளடக்கிய வகையில் 45 தோட்டங்களில் இன்று நிர்மாணப் பணிகளுக்கான அங்குரார்ப்பண விழா நடைபெறுகின்றது.

இதன்பிரதான நிகழ்வு இன்று காலை 10.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது