![பாம்புடன் பாடசாலை வந்த மாணவி](https://www.ethiri.com/wp-content/uploads/2023/12/aampu--620x310.png)
பாம்புடன் பாடசாலை வந்த மாணவி
தரம் 8 இல் கல்வி பயிலும் மாணவியொருவரின் புத்தகப் பைக்குள் விஷப்பாம்பொன்று இருந்ததில் வகுப்பு மாணவர்கள் மத்தியில் பெரும் அச்சத்ததை ஏற்படுத்தியுள்ளது.
ஹிங்குராக்கொட கல்வி வலயத்திற்குட்பட்ட நகரிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் புதன்கிழமை (13) காலை பாடசாலைக்கு வருகை
தந்திருந்த மாணவி புத்தகத்தை எடுப்பதற்காக புத்தகப் பைக்குள் கையை விட்ட வேளை ஏதோவொன்று அசைவதாக உணர்ந்த மாணவி சத்தமிட்டவாறு வகுப்பறையை விட்டு வெளியேறியுள்ளார்.
பாம்புடன் பாடசாலை வந்த மாணவி
விடயமறிந்த பாடசாலை அதிபரும்,ஆசிரியர்களும் அந்த மாணவியின் புத்தகப் பையை வகுப்பறையை விட்டு வெளியே எடுத்து பார்க்கையில் அதனுள்ளே கறுப்பு நிற விஷப்பாம்பொன்று இருப்பது தெரிய வந்தது.
மேலும் பாடசாலையில் பணிப்புரிவோரின் உதவியுடன் பாம்பை விரட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
- தலைகீழாக கவிழ்ந்த கார்
- மன்னாரில் மக்களுக்கு 5000 உறுதிகள்
- பாலியல் உறவை நேரலை செய்த தம்பதிகள்
- லண்டன் செல்ல முற்பட்ட பெண்கைது
- பொது வேட்பாளரை நிறுத்துவது பயனற்றது டக்ளஸ்
- இலங்கையில் அதிகரிக்கும் படுகொலைகள்
- மியன்மாரில் சிக்கிய இலங்கையர்
- தீபச்செல்வன் விசாரணை வலயத்தில்
- தமிழருக்கு எதிரானது பயங்கரவாத தடைச் சட்டம்
- மன்னர் ஆயரை சந்தித்தார் ரணில்
- தவறிவிழுந்து வெளிநாட்டுப் பெண்
- தடம் புரண்ட பிரதான ரயில்