பாடசாலை மாணவிகளை துஸ்பிரயோகம் செய்தமை: சங்கீத ஆசிரியர் கைது

Spread the love

பாடசாலை மாணவிகளை துஸ்பிரயோகம் செய்தமை: சங்கீத ஆசிரியர் கைது

தரம் 10ல் கல்வி கற்கும் மூன்று பாடசாலை மாணவிகளை துன்புறுத்திய குற்றச்சாட்டில் டிக்வெல்ல பாடசாலை சங்கீத பாட ஆசிரியர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சங்கீத வகுப்புக்கு சென்ற மூன்று சிறுமிகளிடம் தகாத முறையில் நடந்துகொண்டதின் பெயரில் கிடைத்த முறைப்பாடுகளின் விசாரணைகளின்

அடிப்படையில், குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாடசாலை மாணவிகளை துஸ்பிரயோகம் செய்தமை: சங்கீத ஆசிரியர் கைது

குறித்த சிறுமிகளின் பெற்றோர்கள் குழந்தை பராமரிப்பு அதிகாரிகளிடம் புகார் அளித்ததையடுத்து, பொலிசார் விசாரணைகளை தொடங்கி

உள்ளத்துடன், இதனுடன் தொடர்புடைய 14 மற்றும் 15 வயதுடைய மூன்று பள்ளி மாணவிகளையும் மருத்துவப் பரிசோதனைக்காக ஜே.எம்.ஓ.வுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர் 38 வயதான நபர் எனவும், அவரை மாத்தறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

    Leave a Reply