பள்ளத்தாக்கில் வீழ்ந்த பயணிகள் பேரூந்து

பயணிகள் பேரூந்து
Spread the love

பள்ளத்தாக்கில் வீழ்ந்த பயணிகள் பேரூந்து

ஹட்டன் சலங்கந்தை வீதியின் பட்டல்கல பகுதியில் தனியார் பேருந்து ஒன்று இன்று (28) காலை 6.30 மணியளவில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஹட்டன் டீ.கே டபீள்யூ தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த பேருந்து வீதியை விட்டு விலகி 72 அடி பள்ளத்தில் உள்ள ஆற்றினுள் விழுந்துள்ளது.

15 பேர் சென்ற இப்பஸ்ஸில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் 9 பேர் காயமடைந்த

நிலையில் டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்

    Leave a Reply