நாய் கற்பழிப்பு -1.5 பில்லியன் இழப்பு கோரும் பேராசிரியர்

நாய் கற்பழிப்பு -1.5 பில்லியன் இழப்பு கோரும் பேராசிரியர்
Spread the love

நாய் கற்பழிப்பு -1.5 பில்லியன் இழப்பு கோரும் பேராசிரியர்

வளர்ப்பு நாய் குட்டியொன்றை பாலியல் ரீதியில் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாக, தன் மீது போலி குற்றச்சாட்டுக்களை சுமத்திய, முன்னாள்

பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர மற்றும் ஆதர்ஷா கரதனா ஆகியோரிடமிருந்து 1.5 பில்லியன் ரூபா நட்டஈட்டை கோரி ஆசு மாரசிங்க வக்கீல் நோட்டீஸ் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

நாய் குட்டியொன்றை பாலியல் ரீதியில் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாக, ஆசு மாரசிங்க மீது, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா

பிரேமசந்திர மற்றும் ஆஸூ மாரசிங்கவுடன் உறவுகளை பேணியதாக கூறப்படும் ஆதர்ஷா கரதனா ஆகியோர் குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருந்தனர்.

நாய் கற்பழிப்பு -1.5 பில்லியன் இழப்பு கோரும் பேராசிரியர்

குறித்த இருவரும் ஊடக சந்திப்பில் காண்பித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள், போலியாக தயாரிக்கப்பட்டவை எனவும் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார்.

தன்மீது தேவையற்ற எண்ணமொன்றை மக்களுக்கு ஏற்படுத்தவும், மக்களை தவறாக வழிக்கு கொண்டு செல்லும் வகையிலும் இந்த இருவரும் செயற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், ஹிருணிகா பிரேமசந்திரவிடம் 500 பில்லியன் ரூபாவும், ஆதர்ஷா கரதனாவிடம் ஒரு பில்லியன் ரூபாவும் நட்டஈடாக கோரியுள்ளார்.

No posts found.