நாட்டின் சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

மண்சரிவு அபாய எச்சரிக்கை
Spread the love

நாட்டின் சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

நிலச்சரிவு காரணமாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி, கேகாலை மாவட்டத்தில் தெஹியோவிட்ட மற்றும் தெரணியகல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு சிவப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது தவிர கேகாலை மாவட்டத்தில் யட்டியந்தோட்டை பிரதேச செயலாளர் பிரிவுக்கும் எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

மேலும், இரத்தினபுரி மாவட்டத்தின் அலபத, நிவித்திகல, கல்வான, அஹெலியகொட மற்றும் இரத்தினபுரி ஆகிய பிரதேசங்களுக்கு அம்பர் நிறத்துடன் கூடிய மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கொழும்பு மாவட்டத்தில் சீதாவக்க பிரதேச செயலகம், கிரியெல்ல, அயகம, குருவிட்ட மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் பெல்மதுல்ல ஆகிய இடங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

No posts found.