நாட்டின் அனைத்துப் பாடசாலைகளையும் 2 கட்டங்களாக திறக்க நடவடிக்கை
நாட்டின் அனைத்துப் பாடசாலைகளையும் இரண்டு கட்டங்களாக வாரத்தில் ஐந்து நாட்களிலும் நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
சுகாதாரப் பரிந்துரைகளுக்கு அமைய எதிர்வரும் 2 ஆம் திகதி முதல்
தரம் 6 தொடக்கம் தரம் 13 வரையான வகுப்புக்கள் காலை 7.30
மணிமுதல் பிற்பகல் 1.30 மணிவரை நடைபெறும்.
செப்ரெம்பர் 8 ஆம் திகதி தொடக்கம் ஆரம்பநிலை வகுப்புக்கள் உட்பட
அனைத்துப் பாடசாலைகளும் வழமை போன்று இடம்பெறும் எனவும்
கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.