நல்லூர் திருவிழாவை முன்னிட்டு புகையிரத சேவைக்கு கோரிக்கை

Spread the love

நல்லூர் திருவிழாவை முன்னிட்டு புகையிரத சேவைக்கு கோரிக்கை

நல்லூர் பெருந்திருவிழாவை முன்னிட்டு தினசரிப் தொடருந்து சேவையை முன்னெடுக்க வேண்டும் என தொடருந்து திணைக்கள பொது முகாமையாளருக்கு நல்லை ஆதீன குரு முதல்வர் ஶ்ரீலஶ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

நல்லூர் திருவிழாவை முன்னிட்டு புகையிரத சேவைக்கு கோரிக்கை

குறித்த கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது,

தற்போது தொடருந்து சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நல்லூர் கந்தசுவாமி கோவில் பெருந்திருவிழா 21.08.2023 ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தினமும் தொடருந்து சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிதது அடியவர்களின் பயணவசதிகளை இலகுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.