நல்லதை செய் …!

Spread the love

நல்லதை செய் …!

கம்பெடுத்து வம்பளந்து
கண்டதென்ன கரிகாலா …?
செம்பெடுத்து நீர் கொடுத்து
செவந்து போனாய் பேரழகா

உன் படைப்பை நீ படைத்து
உலகை ஆளு நீ எடுத்து
செம்படையை நீ அமைத்து
சென்று வா போரெடுத்து

அண்டமெல்லாம் உன்னை கண்டு
அஞ்சும் படி செய்
ஆகாய பந்தலிலே
அறத்தை நாட்டி வை

நீ செய்த சேவைகளை
நீள் அடுக்கி வை
நீண்ட சீன பெரும் சுவராய்
நீ பெருக்கி வை

எவன் தருவான் உன் ஆட்சி
என்று சொல்ல வை
இது தானே வேண்டும்
இன்றெழுதி வை …!

வன்னி மைந்தன்
ஆக்கம் -10-10-2020

Home » Welcome to ethiri .com » நல்லதை செய் …!

Leave a Reply