நடனமாடிக்கொண்டிருந்தவர் திடீர் உயிரிழப்பு

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Spread the love

நடனமாடிக்கொண்டிருந்தவர் திடீர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் , மல்லாகம் பகுதியை சொந்த இடமாக கொண்டவரும் , தற்போது புலம்பெயர்ந்து கனடாவில் வசித்து வருபவருமான நாகராஜா சசிதரன் (வயது 61) என்பவரே இவ்வாரு உயிரிழந்துள்ளார்.

தெல்லிப்பழை மகாஜன கல்லூரி பழைய மாணவர் ஒன்று கூடல் கடந்த சனிக்கிழமை (26) தெல்லிப்பழை பகுதியில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் இடம்பெற்றது.

அதன் போது பாடல் ஒன்றுக்கு நடனமாடிக்கொண்டு இருந்தவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெல்லிப்பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்,