தூக்கில் போட்டு நீதியை நாட்டு …!

Spread the love

தூக்கில் போட்டு நீதியை நாட்டு …!

பதை பதைக்க வதை வதைத்து
பாவையவள் கொன்றாய்- அட
பால் நிலவு தேவைதையை
பல் இழித்து தின்றாய் ….

கூட்டம் வைத்து கூடி நின்று
கூவி கூவி தின்றாய் …
கூவுதடா உலக தமிழ்
கூண்டில் தூக்கில் போடாய் ….

வேடர்களை காத்திட தான்
வேட்டிகளும் துணையோ …?
பாடு பட்டு வாதடா
பைந்தமிழும் துணையோ ..?

கோட்டு போட்டு வாதிட்டால்
கோட்டும் அதிருமோ ..?- அட
நோட்டு வாங்கி வாயாட்ட
நேர்மை செழி விடுமோ …?

மனு நீதி செழியனவன்
மன்றம் நீதி தருமே – இந்த
மறை கழன்றார் நிலையழிய
மரண உடை இடுமே …!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் -13/09/2017
வித்தியா கொலை வழக்கு இறுதி முடிவுற்று நீதிக்காய்
காத்திருக்கும் இவ்வேளை ….!

Home » Welcome to ethiri .com » தூக்கில் போட்டு நீதியை நாட்டு …!

    Leave a Reply