துயிலும் இல்லத்தில் சிரமதானம் கஜேந்திரன் எம்பி களத்தில்
யாழ்ப்பாணம் உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லம் சிரமதானம் பணிகள் மூலம் துப்பரவு செய்யப்பட்டது.
துப்பரவு செய்யப்பட்ட துயிலும் இல்லத்தில் மீட்கப்பட்ட சிதைவுகளுக்கு முன்பாக நேற்று (02) சுடரேற்றி மலரஞ்சலியும் செய்யப்பட்டது.
மாவீரர் வாரம் ஆரம்பமாகவுள்ள நிலையில் வடக்கு கிழக்கில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் சிரமதான பணிகள்
மூலம் துப்பரவு செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.