தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு
Spread the love

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு

தீபாவளி பண்டிகை வருகிற 12-ந்திகதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. தீபாவளி பண்டிகை அன்று, பொதுமக்கள்

புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். ஆனால், பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு அதிக அளவில் ஏற்படுவதாக, இந்தியாவில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் இந்திய உச்ச நீதிமன்றம் இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளித்துள்ளது. அதனடிப்படையில், தமிழகத்தில் இந்த

ஆண்டு தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்க அரசு அனுமதி அளித்துள்ளது.