தீக்கிரையான வீடு மீள் புனரமைப்பு செய்வதற்கு உதவி
மன்னார், தோட்டவெளி பகுதியில் கடந்த வாரம் குடிசை வீடு ஒன்றில் தீ பரவல் ஏற்பட்டதன் காரணமாக முழு வீடும் எரிந்து நாசமாகி இருந்தது.
குறித்த குடும்பம் மிகவும் வறுமை பட்ட நிலையில் வாழ்ந்து வந்ததுடன் 7 மற்றும் 9 ஆம் தரத்தில் கற்கும் இரு பிள்ளைகள் உட்பட அக் குடும்பத்தினர் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் எரிந்த வீட்டை கூட சரிபடுத்த முடியாத நிலையில் பலரிடம் உதவி கோரியிருந்தனர்.
தீக்கிரையான வீடு மீள் புனரமைப்பு செய்வதற்கு உதவி
இந்த நிலையில் குறித்த கோரிக்கையை ஏற்று மன்னார் தமிழரசு கட்சியின் கிளை தலைவரும் சட்டத்தரணியுமான S. டினேஸனின் நிதி ஒதுக்கீட்டில் குறித்த குடும்பத்தின் வீட்டின் கூரை அமைப்பதற்கு உதவிகள் வழங்கப்பட்டது.
மன்னார் தமிழரசு கட்சியின் கிளை உறுப்பினர்கள் இணைந்து மேற்கூரை அமைப்பதற்கான பொருட்களை அக் குடும்பத்திற்கு நேற்று (04) வழங்கி வைத்தனர்.
அதேநேரம் குறித்த குடும்பத்தினர் இவ் பொருளாதார நெருக்கடி காரணமாக மிகவும் வறுமையில் வாடுவதால் உதவ முடிந்தவர்கள் குறித்த குடும்பத்திற்கான மேலதிக உதவிகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- துப்பாக்கிச் சூடு களுத்துறையில்
- இலங்கையில் துக்கதினம் பிரகடனம்
- சிறைக்கைதி மூளைக் காய்ச்சலால் உயிரிழப்பு
- உழவு இயந்திரம் கவிழ்ந்தது
- ISISசேர்ந்த இலங்கையர் இந்தியாவில் கைது
- இராணுவவாகனம் மோதி யுவதி பலி
- இலங்கை வருகிறார் எலோன் மஸ்க்
- சிக்கிய திருட்டு கும்பல்
- நாட்டில் உற்பத்தி நடவடிக்கைகளில் பின்னடைவு
- ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் யார்