திடீர் சுற்றிவளைப்பில் 1,120 பேர் கைது
மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 1,120 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (28) காலை 07 மணிமுதல் பிற்பகல் 05 மணிவரையான காலப்பகுதியில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்டவர்களில், குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் 47 பேரும், நீதிமன்றத்துக்கு
சமூகமளிக்காமல் இருந்த 418 பேரும், இலஞ்ச குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய 549 சந்கே நபர்களும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றில் இன்று(29) முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.