தள்ளாடும் இலங்கை – தரை மட்டமான பொருளாதரம்
இலங்கையில் போரைவென்று தனி சிங்கள மக்களின் வாக்குக்கள் மூலம் நாட்டை
ஆட்சி புரிய அரியணையில் ஏறிய மகிந்த,குடும்பத்திற்கு தற்போது பெரும் நெருக்கடி நிலை தோன்றியுள்ளது
உல்லாச பயணிகளின் வருகையை மைய படுத்தி நாட்டை ஒட்டி சென்றவர்களுக்கு கொரோனா நோயின் காரணமாக அந்த மக்கள் வருகை வீழ்ச்சியடைந்தது
அதனை மையப்படுத்தி ஆரம்பிக்க்க பட்ட பல வேலைத்திட்டங்களும் கைவிட பட்டன ,
மிருகக்காட்சி சாலைகள் முதல் உணவகங்கள் ,கொட்டல்கள் என்பன மக்கள் இன்றி வெறித்து காணப்பட்டன
இதனால் நாடு பெரும் பின்னடவை சந்தித்தது ,பணத்தட்டுப்பாட்டை நிவர்தி செய்திட முடியாத நிலையில் இலங்கை திணறி வருகிறது
இவ்வேளை இதனை சீர் செய்திட விலைவாசிகள் அதிகரிக்க பட்டன ,அன்றாட கூலி மக்கள் முதல் செல்வந்தர்கள் வரை கதி கலங்கி போயுள்ளனர்
கோட்டாவுக்கு ஏன் வாக்கு போட்டோம் என்கின்ற நிலைக்கு மக்கள் தற்போது சிந்திக்க ஆரம்பித்து போராட்டங்களை நடத்த முனைகின்றனர்
இதுவே நாளடைவில் பெரும் ரணகளமாக ஆளும் ஆட்சிக்கு மக்கள் எதிர்ப்பு வலுக்கும் என அடித்து கூறலாம்
இலங்கையில் தலைகீழ் மாற்றம் ஒன்று விரைவில் ஏற்பட போகிறது
- வன்னி மைந்தன் –