தமிழகத்தில் மேலும் 1,562 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் இன்றும் 1,562 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,229 ஆக அதிகரித்துள்ளது.
இன்று மேலும் 17 பேர் உயிரிழந்ததால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 286 ஆக அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில்,; தமிழகத்தில் இன்று 1,562 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதில் 9 பேர் கத்தாரில் இருந்தும், 3 பேர் குவைத்தில் இருந்தும், ஒருவர் டில்லியில் இருந்தும், 22 பேர் மஹாராஷ்டிராவில் இருந்தும்,
ஒருவர் ஹரியானாவில் இருந்தும், 6 பேர் டில்லியில் இருந்தும் வந்தவர்கள். இதன் மூலம் தொற்று உறுதியானவர்களின்
எண்ணிக்கை 33,229 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 528 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனையடுத்து
வீடுதிரும்பியவர்களின் எண்ணிக்கை 17, 527 ஆக அதிகரித்துள்ளது. 15,413 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.