தடுப்பூ ஏற்றியவர்களுக்கு மாத்திரமே வவுனியா பிரதேச செயலகத்திற்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி

Spread the love

தடுப்பூ ஏற்றியவர்களுக்கு மாத்திரமே வவுனியா பிரதேச செயலகத்திற்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி

கொவிட் தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்கள் மாத்திரமே வவுனியா பிரதேச செயலகத்திற்குள் அனுமதிக்கப்பட்டு சேவைகளை பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என வவுனியா பிரதேச செயலகம் அறிவித்துள்ளது.
குறித்த நடைமுறை இன்றைய (04) தினத்திலிருந்து நடைமுறைக்கு வரும்.

சேவை பெறுவதற்கு வருகை தருவோர் தடுப்பூசி அட்டையினையும், தேசிய அடையாள அட்டையினையும் தம்வசம் வைத்திருப்பது அவசியமாகும்.

குறைந்தது ஒரு தடுப்பூசியினையாவது பெற்றிருக்க வேண்டும்.

அவ்வாறு தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளாமல் அட்டை இன்றி வருகை தருவோருக்கு நுழைவாயிலில் வைத்தே சேவை வழங்கப்படும் என்றும் வவுனியா பிரதேச செயலகம் மேலும் அறிவித்துள்ளது.

Leave a Reply