ஜேர்மனியில் துப்பாக்கி சூடு – 8 பேர் பலி
மேற்கு ஜெர்மனி ஹனூ நகரில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இனந் தெரியாத நபர் திடீரென நடத்திய துப்பாக்கி சூட்டால் 8 பேர் பலியாகியதுடன், 5 பேர் வரையில் காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஜேர்மனியின் பேங்க்பிரட்டின் கிழக்கில் ஹனூ பகுதியில் இருக்கும் ஷீஷா பாரில் ஜேர்மன் நேரப்படி இரவு 10.15
மணிக்கு காரில் வந்த இனந் தெரியாத நபரே குறித்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் துப்பாக்கி சூடு நடத்திய நபரை பொலிஸார் ஹெலிகாப்டர் மூலம் தேடி வருவதாகவும், தாக்குதல் நடந்து
சில நிமிடங்கள் என்பதால் சந்தேக நபர் அந்த பகுதியை விட்டு தப்புவதற்குள் ஹெலிகாப்டரில் தேடி வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.